நோம் சாம்ஸ்கி : அறிதல்,மொழி மற்றும் அறிவு பற்றிய கோட்பாடுகள் – ஆர். பாலகிருஷ்ணன்
நோம் சோம்ஸ்கி டிசம்பர் மாதத்தில் (7 th dec 1928 ) பிறந்தவர் . அமெரிக்கர் என்றாலும் அமெரிக்காவினைக் கடுமையாக விமர்சிப்பவர். ரஷ்யாவிலிருந்து அவர் தந்தை குடி பெயர்ந்தவர். ஒரு மொழியியலாளராக இருப்பினும் அவரது அரசியல் பார்வை மிகவும் கவனத்துக்கு உரியது. அத்துடன் பாலஸ்தீன் குறித்த அவரது பார்வை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவருடைய மாபெரும் பங்களிப்பு மாற்றிலக்கணம் (TRANSFORMATIONAL GENERATIVE GRAMMAR) ஆகும். மாற்றிலக்கணம் என்பது மொழி விளக்கம் பற்றிய ஒரு கோட்பாடு அல்ல. மொழி எவ்வாறு தோன்றுகிறது, அது எவ்வாறு செயல்படுகிறது என்பதில் முன்பிருந்த கோட்பாடுகளை மறுதலித்ததில் அவரின் பங்கு குறிப்பிடத்தகுந்தது. அவர் சமூகவியல், உளவியல் கோட்பாட்டாளர்களுடன் முரண்பட்டதை இது விளக்கும்.
சாம்ஸ்கியின் முக்கியமான விவாதங்களில் ஒன்று மனம் உடல், இரண்டையும் பிரிக்க முடியாது. சிந்தனையையும், ஆய்வையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடல் ஒன்றைக் கொண்டே சிந்தனையை வடிவமைக்க முடியும் என்பது. அதாவது அவரது மாற்றிலக்கணம் எனும் (TRANSFORMATIONAL GENERATIVE GRAMMAR) ட்ரான்ஸ்ஃபர்மெஷனல் க்ரேமர், சிண்டக்டிக் ஸ்ற்றக்சரை (SYNTACTIC STRUCTURE) அடிப்படையாகக் கொண்டது. இதுவும் மூளை நரம்பியலின் துணை கொண்டே விளக்க முடியும். மனிதனின் உள்ளார்ந்த ஆற்றல் மற்றும் கூறுகளை விளக்க அறிவாற்றலியல், அறிவுத் தோற்றவியல் (cognition, epistemology) இயங்கு விதிகளைக் கணித்தல் (cognize) முக்கியம். அது இல்லாமல் இதனை நிறைவேற்றிக் கொள்ள இயலாது. அவரது மாற்றிலக்கணம் ஐம்பதுகளின் அறிவாற்றலியல் (cognitive) சாரங்களைக் கொண்டது.
மொழி என்பதே ஒரு அறிவாக உள்ளது என்பார் சோம்ஸ்கி. மொழி உருவாக்கும் அமைப்பு மூளையினில் ஒரு உறுப்பாக உள்ளது என்பது அவர் கருத்து. தன்னை ஒரு மார்க்சாலஜிஸ்ட் அல்ல என்று கூறும் அவர் மனிதனின் மூளை உருவாக்கும் ஒன்றாக மொழியினை வடிவமைப்பதனின்று அவர் தனி மனிதப் படைப்பியலுக்கு முக்கியத்துவம் தருகிறார். சமூகவியல் ஆய்வாளர்களின் மொழி குறித்த பங்களிப்பிற்கு இது முற்றிலும் முரணான ஒரு கோட்பாடு. மார்க்சியம் மொழி என்பது ஒரு சமூக அடிக்கட்டுமானம் என்பதினின்று உருவாகும் மேற்கட்டுமானம் என்று கூறுகிறது. பல்வேறு இனக்குழுக்கள் சமூக இயக்கங்கள் இல்லாமல் மொழி உற்பத்தி ஆகியிருக்க வாய்ப்பில்லை என்பது சமூகவியல் ஆய்வாளர்களின் மொழி குறித்த பங்களிப்பு. ஆனால் சாம்ஸ்கியின் விளக்கங்களை வைத்துப் பார்க்கும் போது அவர் மனதின் படைப்பாற்றலைப் பெரிதும் முக்கியக் காரணமாகக் கருதுகிறார் என்று இதன் மூலம் அறியலாம்.
மொழி என்பது ஒரு அறிவாக உள்ளது. மனது, மூளை இரண்டின் தொடர்பினாலும் துவக்க காலம் தொட்டு குழந்தை கற்றுக்கொள்ளும் மொழியின் பரிமாணமும் புறச் சூழல் ஆகியவற்றால் உருவாகும் பரிமாணமும் ஆக இரண்டு நிலைகளில் மொழி உருவாகிறது என்பார் சோம்ஸ்கி. முந்தைய கருத்தாக்கங்களான மொழிக் கிடங்கு (langue and parole) மற்றும் அனுபவவாதம் (empiricism) ஆகியவற்றின் விளைவாக மொழி உருவாகிறது என்பதனை அவர் மறுதலிக்கிறார். சோம்ஸ்கி மூளையின் நடுப் பகுதியில் மொழி உற்பத்திக்கான களம் உள்ளது என்பார். இந்த உற்பத்திக் களம் துவக்க, வளர்ச்சியுறும், முதிர்ந்த நிலைகளில் குழந்தையிடம் உற்பத்தி செய்வதன் விளைவாகவே மொழி சீரடைகிறது, மொழித் திறன் வளர்கிறது. அது புறச் சூழல்களால் கட்டமைக்கப்படுவதில்லை. புறச் சூழல்களை எதிர் கொள்ளும் மொழித் திறனுள்ள மூளை அல்லது மனம் மொழி கற்றுக்கொள்ளும் செயலாக்கத்தில் முரண்களினூடே வளர்கிறது. அல்லாமல் அமைப்பியல்வாதிகள் கட்டமைப்பது போல் சொற்களின் எதிர்ப் பண்புகளால் அது வளர்வதில்லை. அவற்றின் பட்டியல் மற்றும் அட்டவணை ஆகியன இதில் பொருத்தமான விளக்கங்களைத் தர வாய்ப்பில்லை. அது இலக்கண வறையறைகளால் உருவாக்கப் பட்டது என்பதனை அவர் மறுக்கிறார். சமூகக் குழுக்கள் ஒன்றிணைந்து நீண்ட கால நடைமுறையினால் அது உருவாக்கப்படவும் இல்லை. பட்டியல்கள் மற்றும் அட்டவணைகளின் தொகுப்பாகவும் அது இல்லை. ப்லூம் ஃபீல்ட்(Bloomfield) போன்ற அமெரிக்க அமைப்பியல்வாதிகள் மொழி உற்பத்தியாகும் களங்களை வைத்தே அது உருவாகும், இயங்கும் நிலையினைக் கணிக்க இயலும் என்பர். மொழி விவரிப்பையும் அவ்வாறே கற்க இயலும் என்ற கருத்தும் சாம்ஸ்கியால் மறுதலிக்கப்பட்டது. சாம்ஸ்கி தனது “சிண்டக்டிக் ஸ்ற்றக்சர்ஸ்” (syntactic structures)-வாக்கிய வடிவ அமைப்பியல் எனும் நூல் வாயிலாக எவ்வாறு மொழி தன் போக்கில் மூளையினில் ஒரு சீரான அலகு உற்பத்தியாக வெவ்வேறு இலக்கண அமைப்புகள் மற்றும் வரி அமைப்புகள் கூறுகளாக அமைந்துள்ளன என நிரூபிக்கிறார். இவை மூளையின் சுயாதீனமான உற்பத்தி முறையினை உள்ளடக்கியவை என்பது குறிப்பிடத்தகுந்தது. மூளை இவ்வாறு ஒரு உற்பத்திக் கேந்திரமாக படைப்பாற்றலொடு அறிவினையே உற்பத்தி செய்கிறது எனலாம்.
சசூர்: சசூர் மொழி ஆய்வில் பெரிய பங்களிப்பு எதனையும் செய்திடவில்லை என்பது சாம்ஸ்கியின் கருத்து. கிடங்கு என்ற அவரின் கோட்பாட்டின்படி மொழி ஒரு சேமிப்பு மையமாக உள்ளதினை சாம்ஸ்கி மறுக்கிறார். அம்மையம் ஒரு அமைப்பாகவும் இல்லை. ஒவ்வொரு முறை உரையாடும் போதும் மனிதனால் மொழி புதியதாக உற்பத்தி செய்யப் படுகிறது. ஆகவே உலகே ஒரு அர்த்தவியல் களமாக உள்ளது. புதிய சொல் புதிய வரி வடிவம் ஆகியன தொடர்ந்து உற்பத்தி செய்யப்படும் களமாக மனித மூளை உள்ள நிலையில் சேமிக்கப்பட்ட மொழி என்பதே தொடர்ந்து செயல் பாட்டில் உள்ளது என்பது பொறுத்தமற்ற விவாதம். ஒரு அமைப்பு என்பது தன்னைத்தானே மாற்றிக் கொள்ளும், வளர்ச்சியடையும் தன்மையுள்ள ஒன்றினையே அவ்வாறு கூற முடியும். ஆனால் எஸ்பெர்சன்(Jespersen) மொழி அலகுகள் மற்றும் இலக்கண அலகுகள், அர்த்த அலகுகள் குறித்து உரைக்கிறார். இது முக்கியமானது என்பார் சோம்ஸ்கி. எனினும் சசூரின் ஆய்வுகள் மொழியியலுக்கு நல்ல தொடக்கம் என்றும் அவர் ஒப்புக் கொள்கிறார். பின்னாட்களில் அவர் அமைப்பியல் வாதிகளை முற்றிலும் தவிர்ப்பது குறிப்பிடத் தகுந்தது.
மெக்ஸ் வேபெர் : மெக்ஸ் வேபெர் (Max weber) ஒரு ஜெர்மன் தத்துவவியளாலர். அனுபவவாதம் என்பதனைப் பொறுத்தே எதனையும் நிறுவ முடியும் என்று வலியுறுத்தியவர். புறவய அணுகுமுறை, சித்தாந்தம் மற்றும் மதம் உடன் சமூக அமைப்புகள் ஆகியவற்றின் தொடர்பினை இவ்வகை அனுபவவாதம் கொண்டே விளக்க முடியும் என்பார். தத்துவியளாலர்கள் மொழி ஒரு விளையாட்டாக நிகழ்வதாகக் கூறுவர்.
மார்க்சிசம் இதே வகையினில் சமூகத்தின் ஒரு உற்பத்தியாகவே மொழியினை நிறுவ முயல்கிறது. மேல் கட்டுமானம் அடிக்கட்டுமானம் என்ற வகையினில் மொழியினை அது மேல் கட்டுமானமாக, சமூக உற்பத்திப் பொருளாகவும் விவரிக்கிறது. சபிர் போன்ற சமூகவியலாளர்கள் எப்படி மொழி சமூகத்தின் பங்களிப்பு இல்லாமல் உருவாக முடியும் என்று கேட்கின்றனர். மூளையின் ஒரு செயலியாக எவ்வாறு மொழியினைக் கருத இயலும் என்று மனிதவியல் சிந்தனையாளர்களும் வினவுகின்றனர். சாம்ஸ்கி இவ்விதத்தில் ஸ்கின்னெர் (skinner) போன்ற உளவியலாளர்களுடன் ஒன்றிப்போகிறார்.
அனிச்சையான நடவடிக்கைகள் எவ்வாறு மிதி வண்டி ஒட்டுதல் போன்றவற்றை வடிவமைக்கின்றனவோ அப்படியே மொழியும் மூளையால் வடிவமைக்கப் படுகிறது என்பதனை நிரூபிக்க அவர் உருவாக்கியமுறை தான் “சிண்டக்டிக் ஸ்ற்றக்சர்ஸ்”. (syntactic structures) மொழி வெவ்வேறு மொழி சார் நுண் அலகுகளின் வாயிலாக தன்னைத்தானே கட்டமைக்கிறது. இது மூளையின் மிக அரிதான நடவடிக்கை. சமூக அளவில் நிகழும் தாக்கங்களை அது எதிர் கொள்ளும் விதம் முரண்களை எதிர் கொள்ளுதலுக்கு ஒப்பானது. இதனால் புறத் தாக்கங்கள் அதன் அரிய வகை மாற்றங்களுக்கு உட்பட்டே அதாவது அதன் சீரமைப்பு அல்லது படைப்பாற்றலுக்கு உட்பட்டே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஒரு வித கணித்தல், நுண் உணர்தல் நிலைப்பாடு இது எனலாம். அது அவ்வாறு நிகழ்கிறது என்பார் சோம்ஸ்கி. ஆகவே மொழி தானாக உற்பத்தியாகிறது. தத்துவியளாலர்கள் மொழி ஒரு விளையாட்டாக நிகழ்வதாகக் கூறுவர். இவ்வகை விளக்கங்கள் மனிதனின் மதி நுட்பத்துக்கு எதிரானவை. நுண்ணறிதல் மேலுள்ளவற்றை நீக்கி உள்ளார்ந்த ஆய்வு
இவற்றாலேயே இதனை அறிய முடியும். ஆகவே இவ்வகை விளக்கங்கள் பொருத்தமற்றவை. சமூகத்தின் புறச் சொல்லாடலினை ஒத்து உள்ளார்ந்த ஒரு செய்கையாகவே மொழி உருவாக்கம் நிகழ்கிறது. மூளையின் பார்வைத் திறன் பகுதிகள் இவற்றை வடிவமைக்க உதவும். தமிழ் இவ்விதத்தில் மலையாளம் அல்ல. மொழி அறிதல் என்பது இவ்வாறு நீண்ட காலமாக பேசுபவரின் அறிவு சார் நடவடிக்கையாக உருவாக்கப் படுகிறது. விளைவாக, இலக்கணக் கட்டமைப்பும் நிகழ்கிறது. வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு வெளியிடலை இவ்வாறு ஒருவரால் உருவாக்க முடியும். இறுதியாக அவர் மாற்றிலக்கணத்தை இந்த அடிப்படைகளிலேயே வடிவமைக்கிறார். மாற்றிலக்கணம் ஆழ் கட்டமைப்பு மற்றும் மேல் கட்டமைப்பு என இரண்டு நிலைகளை உடையது. மாற்றத்தினை உருவாக்கும் செயல், அடிப்படைக் கட்டமைப்பில் தோன்றுகிறது. அதாவது ஒவ்வொரு உப அலகும் ( இலக்கண, வரி சார், சொற் கூறு ) இத்தகைய செயலை நிகழ்த்தவல்லன. இதன் அடிப்படையில் உருவானதே உலகு நிறை இலக்கணம். (universal grammar). மானுடர்களின் உடல் மற்றும் மனதின் திறத்தால் வடிவமைக்கப் பட்டவை. அவர்களால் எந்த ஒரு மொழியினையும் கற்றுக் கொள்ள இயலும். அடிப்படையான இலக்கண ஒலி மற்றும் அர்த்தக் கூறுகள் எல்லா மானுடராலும் உருவாக்கத் தகுந்தவை.
சொல், பொருள் மற்றும் அறிவு:
சொல்லுக்கான பொருள் என்பது உறுதியற்றது, அது எப்பொழுதும் மாறிக் கொண்டிருப்பது என்ற தெரிதாவின் கருத்து குறித்து சாம்ஸ்கி:
உறுதியற்றது, அவற்றின் நிலைமை குறித்துப் பலரது ஆய்வுகள் உள்ளன. வெவ்வேறு கோணங்களில் உள்ளன. எனவே ஒரு ஒற்றைக் கருத்தை நாம் முடிவானது என்று கொள்ள இயலாது. மொழி, அதன் உருவாக்கம் பற்றிய தன்னுடைய கருத்துக்கள் உட்பட எவற்றையும் சாம்ஸ்கி முடிவனதாகக் கொள்ள வேண்டியதில்லை என்கிறார். மொழி பற்றிய ஆய்வு யாவற்றின் துவக்கம் என்பது சரியான அணுகுமுறை. சொல் மற்றும் அதன் பொருள் ஆகியனவற்றை அறிதல், நமக்கு இயல்பான கட்டமைப்பில் உள்ள உள்ளடங்கிய கருத்துக்கள் – மொழியைக் கற்றுக் கொள்ளும் நடைமுறையில் அல்லது எந்த ஒர் அறிவாற்றல் செயலாக்கத்திலும் இத்தகு அறிதல் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இது கை, கால்கள் வளர்வதற்கு ஒப்பாகும். இது அவ்வகையினில் பொருள்(meaning) ஒர் நோக்குடையது. ஆனால் இத்தகு ஒற்றைப் பரிமாணம் கூட நாம் மற்றவருடன் உரையாடும் நிலையில் மாறுபடக் கூடியது. இத்தகு தருணங்களில் கேட்பவரின் அறிவு, இலக்கு, கொள்ளும் பொருளின் விழுமியம், உணர்வு அவர் கற்பனைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் தன்மை என்றவற்றால் பொருள் மிகுதியும் மாறக் கூடும். இந்த நிலையினில் தெரிதா கூறும், ஒர் பொருளற்ற தன்மை மற்றும் ஒழுகும் தன்மை(fluidity) ஆகியன நிகழக் கூடும். எனினும் அதனுள் குறைந்த அளவு, மையமான உண்மை எந்தச் சார்புமின்றி நிறைந்திருக்கும் என்பார்.
பொருள் (semantically) எப்பொதும் ஒன்றான விளக்கத்தினைக் கோராது என்பது உண்மை என்ற போதும் உடற் கூற்று அடிப்படையினில் பொருளின் மையம் அல்லது பொதுவான அல்லது உண்மைத் தன்மை என்பது உள்ளார்ந்த பொருள் உருவாக்கும் கட்டமைப்பின் அடிப்படையில் விளங்கிக் கொள்ள முடியும். அறிவு என்பது ஒரு தொடர் நிகழ்வாக இருப்பது என்றும் அது கூட்டு சமூகக் காரணிகளால் செயலாக்கம் பெறும் என்றும் சாம்ஸ்கி கூறுவார். கூட்டுப் பண்பாடு அறிவை உருவாக்கும் ஆனால் தனி நபரின் உள்ளார்ந்த கூறு அதன் அடிப்படைக் கட்டமைப்பு. இந்த வேறுபாடு முக்கியம்.
குறிப்பாக, ஒழுங்கமைக்கப்பட்ட அறிவின் வாயிலாக் காணும் உண்மை, இயற்கை அறிவியலில் ஒரு பக்க ஆராய்ச்சி (one sided) என்று புரிந்து கொள்ளுங்கள். விவாதங்கள், உரையாடல்கள் மூலம் இது மேம்படுத்தப்பட்டு வளர்க்கப்படும். சமூகத்தின் பங்கெடுப்பு என்பது இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சூழலில் அறிவு உருவாக்கம் நிகழும். எந்த முடிவும் ஒருவித அறிவு அல்லது புரிதல்; இந்த மானுடத் தொடர்புகளின் தன்மையால் சமூக ரீதியாக அது தீர்மானிக்கப்படுகிறது. மறுபுறம், விஞ்ஞான அறிவு எவ்வாறு உருவாகிறது என்பது போன்றவற்றைப் பற்றி நாம் அதிகம் புரிந்து கொள்ளாத பெரும்பாலான களங்கள் உள்ளன. நமது புரிதலுக்கு உள்ளாகின்ற களங்களை நாம் கண்டால் அறிவாற்றல் அமைப்புகளின் வளர்ச்சி, குறிப்பாக அறிவு சார் அமைப்புகள் உட்பட, நமது உயிரியல் தன்மையால் கணிசமாக இயக்கப்படுகிறது. மொழி அறிவின் விஷயத்தில், இது குறித்த தெளிவான சான்றுகள் எங்களிடம் உள்ளன என்றும் சாம்ஸ்கி பகர்கிறார். மொழி ஆய்வில் அவர் கண்டது என்னவென்றால், மொழித்திறன் மனித இயல்பு மற்றும் மனித செயல்பாடுகளுக்கு உள்ளார்ந்த ஒன்றாகும். எனவே இது ஒரு சிறிய சொல்லாடல் அல்லது வழக்கு அல்ல. அங்கு எழும் அறிவு அமைப்பின் வடிவத்தில் உயிரியல் – இயற்கையின் வழிநடத்தும் விளைவுக்கு மிக சக்திவாய்ந்த சான்றுகள் உள்ளன. சுருக்கமாக, ஒரு சில தனி நபர்களின் உரையாடல் அல்லது மொழி வாயிலாக அறிதல் என்பவையே கூட மனித குலம் ஈடுபட்டுவரும் அறிதல் நடவடிக்கையின், அறிவாற்றல் சார்ந்த நடவடிக்கையின் ஒன்றாகவே சாம்ஸ்கி காண்கிறார். இந்த ஒருமை மனிதர்களின் உயிரியல் தன்மையை மையமாகக் கொண்டது. மனித உடலின் ஒரு பகுதி நடவடிக்கையே அறிவு என்பதாகும். உயிரியல் நடத்தை என்ற நமது புரிதல் யாவும் கழுத்துக்குக் கீழான செயல்பாடுகள் என்றே உள்ளன. ஆனால் கழுத்துக்கு மேல் உள்ள சிந்தனை மற்றும் மொழி கூட நமது உயிரியல் நடத்தையே.
ஒருவர் கூற்று அல்லது உரையாடல் அனைத்தும் கிட்டத்தட்ட தூய ஊகங்கள் என்று தெரியவில்லை. ஆனால் விஞ்ஞான அறிவைப் பெறுவதற்கான செயல்முறையின் முழுமையான தன்மை உயிரியல் மற்றும் இயற்கையின் அதிக வழிநடத்தும் விளைவைக் குறிக்கிறது என்று நான் நினைக்கிறேன் – இது தான் சாம்ஸ்கி.
கலிலியோவின் பார்வை உருவாக்கிய மாற்றங்கள் அடிப்படையானவை என்று சாம்ஸ்கி கூறுவார். அவருடைய வார்த்தைகளில், ”அடிப்படையில் ஒரு அறிவியல் புரட்சி நிகழ்ந்துள்ளது: கலிலியன் புரட்சி, கலிலியோ உள்ளிட்ட ஒரு காலகட்டத்தில் நீடித்த பதினேழாம் நூற்றாண்டு புரட்சி. இது ஒரு உண்மையான புரட்சி, பல விஷயங்களில் விஷயங்களைப் பார்ப்பதற்கான வித்தியாசமான வழி. உதாரணமாக, அந்த நேரத்தில் ஒரு வகையான இயற்கை வரலாற்று கண்ணோட்டத்திலிருந்து இயற்கை அறிவியல் கண்ணோட்டத்திற்கு மிகவும் கூர்மையான மாற்றம் ஏற்பட்டது. உண்மையை நோக்கிய ஒரு வித்தியாசமான அணுகுமுறை இலட்சியமயமாக்கலுக்கு மாறுபட்ட அணுகுமுறையை உருவாக்கியது, விளக்கத்தின் வேறுபட்ட கருத்து. புதிய திசைகளுக்கு இட்டுச்செல்லும் இயந்திர விளக்கத்தின் பொது அறிவு கருத்தின் ஒரு முழுமையான முறிவு, குறிப்பாக நியூட்டனுடன் இருந்தது. இந்த அணுகுமுறை எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்தது, இது ஒரு தீவிரமான முன்னோக்கு என்று நான் நினைக்கிறேன்”.
மொழியியலில் இதன் பின்னான ஆய்வுகள் மற்ற துறைகளில் அதாவது உயிரியல், உளவியல் – இப்போது மூளை நரம்பியல் ஆகியவற்றின் துணையுடன் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும், 1950 களின் நடுப்பகுதியில் “அறிவாற்றல் புரட்சி” என்று அழைக்கப்பட்டவற்றுடன் தொடர்புடைய அடிப்படை அறிவுசார் முன்னேற்றங்கள் மற்றும் கண்ணோட்டங்களின் மாற்றங்களை நீங்கள் பார்த்தாலும், இதில் உற்பத்தி, இலக்கணத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருந்தது. அவை “முதல் அறிவாற்றல் புரட்சி” என்று அழைக்க விரும்பும் பதினேழாம் நூற்றாண்டில் நிகழ்ந்த மாற்றங்களை மறுபரிசீலனை செய்து திருத்துகின்றன. எடுத்துக்காட்டாக, 1950 களில் ஒரு பெரிய மாற்றமானது நடத்தை மீதான அக்கறை மற்றும் நடத்தை(behaviourism) தீர்மானிக்கும் நடத்தை செயல்முறைகளை தீர்மானிக்கும் உள் செயல்முறைகளை நோக்கிய நடத்தையின் தயாரிப்புகளிலிருந்து முன்னோக்கின மாற்றமாகும். இப்போது அது இயற்கையான அறிவியலை நோக்கி நகர்கிறது. அறிவாற்றல் அறிவியலில் (cognizant science) “கார்ட்டீசியன் புரட்சி” என்று நாம் அழைக்கக்கூடிய ஒரு மாற்றம் ஏற்பட்டது. இதனுடன் தொடர்புடையது ஒரு மறுமலர்ச்சி. பின் உளவியல் ஆய்வுகள் அவற்றின் முடிவுகள் உடலின் அடிப்படையில் விளக்கப்படுகின்றன. பிறகு டெஸ்கார்ட்ஸின் (Descartes) பார்வைக் கோட்பாடு, இது ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருந்தது மற்றும் ஒரு வகையான பிரதிநிதித்துவ, அடையாளத்தை மனம் கொள்வதாக இது உணர்த்தியது.
ஐம்பதுகளுக்குப் பிறகு நிகழ்ந்த ஆய்வுக் கண்ணோட்டம், உளவியல் என்பது கூட உள்ளார்ந்த கட்டமைப்புகள் எவ்வாறு நடத்தைகளை நிர்ணயிக்கின்றன என்பதே. இது கார்டீசிய வழி முறை. இதனை ஒட்டி நிகழ்ந்த மாற்றங்கள் மூளையின் கணித்தல் இயல் மாற்றங்கள்(computated models) – மாதிரிகள் எனப்படும். இவை உருவானதற்குக் கூட டெஸ்கார்தெயின்(Descartes) தொலை நோக்கு காரணம். அது கணிப்பொறி , கணித்தல் மாதிரிகள் உருவாகக் காரணம் என்பார் சாம்ஸ்கி. கார்டீசிய(Cartesian) வழிமுறைகள் மற்ற மனங்களை அறிவதற்கு மொழியியல் மாதிரிகளையே பயபன்படுத்தி வந்தன. ஆகவே மூளை உருவாக்கும் மொழியின் படைப்பு நிலை உள்ளார்ந்தது , உள் வயமானது அது ”வெளி” (external) யால் தூண்டப் பட்டதல்ல. ஒத்திசைவுள்ள இந்தப் படைப்பாற்றல் மற்ற மனம், மூளை ஆகியவற்றின் ஒத்திசைவை உண்டாக்குகிறது மற்றும் தூண்டுகிறது. கார்டீசிய அணுகுமுறையின் சிறப்பானது அன்றைய காலகட்டத்தில் உடல் என்பது இயந்திரம் போன்றது என்று விளங்கிக் கொண்டது எனினும் சிந்தனை உடலின் ஒரு பாகமாக, ஒரு உள்ளுணர்வாக இருப்பது என்பதையும் அது முதலில் வெளியிட்டது.
உலகு நிறை இலக்கணம் (universal grammar) என்பது மிகச்செறிவான ஒரு அறிவுக் கூறு முறை எனினும் குறுகலான வடிவமைப்பைக் கொண்டது. உள்ளார்ந்த வழிமுறைகள் மூலம் அது நிகழ்வுகளை முன் கூறும். அதன் முக்கியச் செய்கையானது மாறுதலடைதல்; ஆழ் மற்றும் மேல் தளங்களில் மாற்றங்கள் நிகழ்த்துதல். மனித மூளை தனது கட்டமைப்பினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு அறிதல் திறன்களை வெளியிடும். தானே செப்பனிட்டுக் கொள்ளவும் செய்யும். சிந்தனைகளை உற்பத்தி செய்யும் அதன் அடிப்படை அறிவு உருவாக்கத்திற்குக் காரணம். இவ்விரண்டையும் தொடர்புறுத்திடும் நிலையே மொழி. மொழி விதி முறைகள் எல்லா மொழிகளுக்கும் பொருந்துவன.
சோம்ஸ்கியும் மார்க்சிசமும்:
சோம்ஸ்கி தன்னை ஒரு மார்க்சிஸ்டாக நிலை நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை. எனினும் அவர் வியட்நாம் போர் மற்றும் பலெஸ்டீன் (palestine)குறித்து மார்க்சியர்களை ஒத்தே கருத்துக் கூறி உளளார். உலகெங்கிலும் நிலவும் அநீதிக்கெதிராக அவர் கருத்துகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அறிவாளிகள் எவ்வாறு அதிகாரத்திற்குச் சேவை செய்கிறார்கள், மக்களைச் சுரண்ட அவர்கள் எவ்வாறு உதவுகிறார்கள் என்பதை சாம்ஸ்கி எடுத்துக் காட்டுகிறார். 16 ஆம் நூற்றாண்டு ஜெர்மானிய மேதை ஹம்பொல்ட்டின் கருத்துகளால் கவரப்பட்டு தன் கல்வி மற்றும் சிந்தனை சார்ந்த கொள்கைகளை வகுக்கிறார். ஹம்பொல்ட் மனதில் உள்ள ஒரு படைப்பாற்றலே அறிவு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றிற்குக் காரணம் என்பார். இதனை ஒட்டிய சம்ஸ்கியின் சிந்தனைகள் மார்க்சிசத்துடன் பொருத்தமுடையன அல்ல. ஏன் என்றால் மார்க்சியம் அறிவு என்பது சமூகத்தின் சமனிலையினை உண்டாக்க வேண்டிய பொறுப்புள்ளது என்ற கருத்தினைக் கொண்டது. மேலும் வால்டெர் லிப்மனின் “ஒப்புதல் உற்பதியாக்கம்” என்பதில் சோம்ஸ்கி தீவிர நம்பிக்கை கொண்டவர். 50 மற்றும் 60 களில் மேலைப் பல்கலைக்கழகங்கள் போருக்குப் பிந்திய அரசியல் மற்றும் வியட்னாம் போரால் மாணவர்களின் நிலை குலைந்த அரசியலால் பாதிப்புக்குள்ளாகின. அதிகாரக் குழுக்கள் ஒரு சமரசத்தை எற்படுத்திக் கொண்டு கல்வி மற்றும் ஆய்வுகளுக்குத் தடையில்லாத அரசியல் நிலைப்பாட்டினை உருவாக்க விரும்பின. விளைவாக ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள் அல்லாத இடை நிலை அறிவு நிறுவனங்கள் மாற்று அறிவு நிலையினை உருவாக்குவதாகத் தோற்றம் கொண்டன. இவ்வகை செயல்பாடுகள் ‘ஒப்புதல் உற்பத்தி’ என்கிறார் சொம்ஸ்கி. கார்ல் மார்க்ஸ் தன்னுடைய மூலதனம் நூலுக்கு முன் ஒரு ஆய்வு முறையியல் எழுதியதைப் போல (Grundrisse) இவரும் ஒரு ஆய்வு முறையியல் ஒன்றை எழுதி உள்ளார். “மெதொடலஜிகல் ப்ரெலிமினரிஸ் டு சின்டக்டிக் ஸ்ற்றக்சர்ஸ்” (methodological preliminaries to syntactic structures)என்று அதன் பெயர். 60 களில் வியட்னாம் போரை எதிர்த்து அமெரிக்கா மற்றும் ஐரொப்பாவில் போராட்டங்கள், மாணவர் போராட்டங்கள் நடந்து வந்தன. இது பல்கலைக் கழகங்களில் நிகழும் ஆய்வு மற்றும் கல்வி நடவடிக்கைகளைப் பாதித்தது. சோம்ஸ்கி இதனைக் கல்வி எவ்வாறு தனது முதலாளித்துவ இலக்குகளை நோக்கி நகரும் வழியில் இடர் காண்கிறது, மாணவர்களுக்கான இலக்குகள் அவர்களை ஒட்டி இருக்க வேண்டும் என்ற அளவில் உருவாக்கியதே ‘மெனுஃபக்சர் ஒஃப் கன்சென்ட்” (manufacture of consent)என்ற கருத்து.
சோம்ஸ்கி பின் நவீனத்துவ, அமைப்பியல் மற்றும் மார்க்சீய அறிவுவாதிகளுடன் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆர் பாலகிருஷ்ணன் : ஆங்கிலப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்.
E MAIL: rdada2001@gmail.com rdada2001@gmail.com; mobile 9362949350