எழுதுவதின் இன்பம், வாசித்தல் – ரோலான் பார்த்துடன் ஒரு நேர்காணல்: தமிழில் – ஆர். பாலகிருஷ்ணன்
கேள்வி: சாதே, பூரியர், லயோலா மூவரிடமும் தீமையின் தத்துவம், கற்பனையுலகு சோசலிசம் மற்றும் மறைபொருள் (cryptic) பொதிந்த கீழ்ப்படிதல் இவற்றைத்தாண்டி நீங்கள் எழுத்தின் கண்டுபிடிப்பாளர்கள், புதிய ஆக்கத்தினை நிறுவியவர்கள் என்று ஆய்வு செய்ய முற்படுகிறீர்கள். மொழியினைக் கண்டடைந்தவர்களாகிய இம்மூவர் குறித்த தங்கள் ஆய்வு 20 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ரைட்டிங் டிகிரீ சீரோவில் (writing degree zero) துவங்குகிறது. மேதமையோடு. எம்பயர் ஆஃப் சைன்ஸ் (empire of science), சாதே, பூரியர், லயோலா ஆகியன பிரதியின் புது மகிழ்ச்சி தரும் உறவினை விளக்குகின்றன. பிரதியினை இரு காலங்களுக்கு இடையில் பிளவு படுத்துதலைக்கூட அவை செய்கின்றனவா?
பதில்: உங்களது இறுதி வாக்கியத்தில் இருந்து நாம் புரிந்து கொள்வது அது பன்முக வரலாற்றில் இருந்து (கலாச்சாரம் என்பது பல பரிமாணம் உடையது) மேலும் பிரதி என்பது கலாச்சாரத்தை முற்றிலும் தாங்கி நிற்கின்ற ஒரு சின்னமாகவே இதனை உணரலாம். எனது தனிப்பட்ட படிப்புகளின் அடிப்படையில் இந்த வரலாறு 20 ஆண்டுகளைப் பொதிந்துள்ளது. வரலாற்றில் சார்த் பூரியர் லயோலா ஆகியோர் முற்றிலும் மனதை ஆக்கிரமித்துள்ளனர். நாம் கூறுவது எழுதுதல் குறித்து. இதனைக் குறித்து நான் ரைட்டிங்க் டிகிரீ சீரொவினைத் துவக்கிய காலத்தில் இருந்து வெவ்வேறு நிலைகளில் ஆய்வு செய்தும் உணர்ந்தும் வருகிறேன். சமயங்களில் அதனை நான் அறிவியல் பூர்வமான பிரதிபலிப்புகளாக நவநாகரீக அமைப்புக்கு ஒப்ப உருவாக்கியும் வருகின்றேன். நவநாகரீகம் குறித்த, ஃபாஷன் குறித்த மொழி இலக்கிய மொழி அல்ல. ஆனால் இன்றைய நவநாகரீகம் நிழற்படமாக்கப்பட்ட நாகரீகம். அது ஏடுகளில் விவரிக்கப்பட்டுள்ளபடி அதனைப் புரிந்துகொண்டு கூற முயல்வேன். அவ்வகையில் எழுதப்பட்டிருக்கும் மொழி எனது விருப்பத்துடன் தொடர்புடையது. இது தெளிவு. சாதே பூரியர், லயோலா இரண்டாம் மொழிச் சொல்லாடல் மற்றும் மொழி குறித்து ஆய்வு செய்து உள்ளனர். சாதே பூரியர் ஆகியோர் இத்தகு இரண்டாம் நிலைச் சொல்லாடல்கள் மற்றும் மொழி குறித்து ஆய்வு செய்தது இசை உணர்வுடன் கூடிய வாழ் நாளின் முழு படைப்பின் ஒரு மாறிலி (variant) எனக் கொள்ளலாம். புதிய அங்கத்தில் எம்ப்பயர் ஆஃப் சைன்ஸ் எனவும் சொல்லலாம்…
பிரதியிலுள்ள மகிழ்ச்சி, களிப்பு ஆகியன குறித்தும் நான் சிந்திப்பேன். நான் அதனைக் கண்டபோது ஜப்பானிய வாழ்முறை, நிச்சயமாக, தொழில்நுட்ப வல்லமையுடைய, முதலாளீய ஜப்பான் அல்ல. ஆனால் அது மாயத் (illusion) தோற்றம் கொண்டது. (ஜப்பான் நாடு குறிப்பீட்டுக்கும் குறிப்பானுக்கும் வேறுபாடு இல்லாதது என்று பார்த் கூறுகிறார்) எம்பயர் ஆஃப் சைன்ஸ் என… ஜெரார்ட் ஜெனே தனது படைப்பில் குறிப்பிட்டது போல, ”குறியின் (sign) ஒரு வித நன்னெறி” (நன்னெறி என்பதை எதிக்ஸ் என்று பொருள் கொள்ளவும்) சார்ந்த அளவில் எனை விடுதலை செய்ய அனுமதித்தது. எனக்குக் குறிகளுடன் எத்தகைய நடுநிலை உறவும் இல்லை. சமூகங்கள் மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் நுட்பமாக, அவற்றினூடே சூனியத்தை (ஃஜீரோ) அடையும் அளவு–நான் நெருங்கவும் இல்லை, சீரோவினை- அவற்றுள் நெருங்க வேண்டும் என்று எனக்கு விருப்பம் உள்ளது. மேலும் இவ்வுறவு இருமனப் போக்கு உடையது. சில சமயங்களில் நான் குறிகளால் விடுதலை செய்யப்படுகிறேன். ஏன் என்றால் எனை அவை பாதுகாக்கும். நம்முடைய அந்நியமாதல், மனப் பதற்றம் நிறைந்த சமூகங்களில் குறியீடுகள் தெளிவு மற்றும் நிலைத்தன்மையுடன் தாமே தம்மை நிறுவிக்கொள்ள வேண்டும். சரியாக வடிவமைந்த குறியானது தன்னை நிறுவிக் கொள்ளத்தகுந்தது. அது சற்று தடைகளுக்கு உட்பட்டது என்றாலும். அதே வேளையில் குறியீடுகளால் நான் துன்பமடைகின்றேன். குறியீடுகளை நடு நிலையாக்கும், அவற்றை உறுதியற்றதாக்கும் மொழிகள் மற்றும் சமூகங்களை நான் சகித்துக்கொள்ள முடியாது. அவைகள் குறியீடுகளைச் செயல்பட அனுமதிக்கின்றன. அவற்றின் தொடர்ச்சியும் அவற்றில் உண்டு. ஆனால் அவற்றை எவ்வாறு விரும்புகின்றனவோ அவ்வாறே மீண்டும் உபயோகிக்கவும் அவை வலியுறுத்துகின்றன. வேறொரு விதத்தில், அவை குறிடயீடுகள் — அவை எவ்வாறு உள்ளனவோ அவ்வாறு நாம் உணர்ந்து கொள்வதில்லை. வரலாற்றின் படைப்புகள், அர்த்தத்தின் விரிவாக்கம் இவற்றை அவை ஏற்பதில்லை. இத்தகு சகிப்புணர்வின்மை விளைவாக உருவாகியதே எனது மைதாலஜீஸ். (mythologies) உதாரணமாக, நான் எழுதிய ஜப்பான் என்பது அது புராணிகத்திற்கு எதிரானது. ஒரு குறியீடுகளின் களிப்பினாலானது. மற்றும் தனது மெல்லிய இயல்புக்கெதிரான. வரலாற்றுச் சூழ்நிலையினின்றும் நவீனத்திற்கு மாற்றிக் கொண்ட ஒன்று. இருப்பினும் நிலப் பிரபுத்தன்மைகளுடன் கூடிய தன்னுடைய அர்த்தவியல் செல்வங்களை அது இழக்கவில்லை, அங்கு அவை இன்னும் முழுமையாகத் தட்டையாக்கப்படவில்லை. மக்கள் திரள் கலாச்சாரத்தால் கட்டுப் படுத்தப்பட்டு, நுகர்வு சமூகத்தால் பழமையான நிலப் பிரபுத் தன்மைகள் முற்றிலும் சுரண்டி எடுக்கப்படாமல் உள்ள ஒரு சமூகமாகவே அது இன்னும் உள்ளது.
ஆகவே ஜப்பானைப் பொருத்தமட்டில் அதனை ஒரு புறம் வலுவான நுட்பமான குறிகள் எப்பொழுதும் இயல்பாக்குவதில்லை. (அதாவது அவை குறியீட்டு அமைப்புகளில் உள்ளவாறு) மறுபுறம் அவை இறுதிநிலைக் குறிகளாகவோ, நியமித்த, மூடிய குறிப்பீடுகளாகவோ காணப்படுவதில்லை. (ஜப்பானிய வாழ்வியலை நடத்தும் குறியீடுகள் இறுக்கமானவை அல்ல) இவை ஜப்பானின் பழமை மற்றும் அதன் சமய வரலாறு, புறச் சமயத்தின் மதிப்பான தன்மை மற்றும் ஜென் பௌத்தம் ஆகியன சார்ந்தது. யூத, இஸ்லாமிய, கிறித்துவம் சார்ந்த நாடுகளில் காணப்படும்படி ஜப்பான் ஒரு வகையான கூறு மட்டுமே கொண்ட சொல்லாடலைக் கொண்டிருப்பதல்ல. (பழமையானது என்றாலும் அவை மதிப்பு மிக்கதாக இருக்கும் போது ஜப்பான் அவற்றை இழப்பதில்லை, இதனால் அது நவீனமயமானாலும் பொருளுடைய வாழ்முறை உடையது. மொ-ர்) ஜப்பான் பற்றி எழுதுவது எனக்கு ஒரு விதத்தில் மனவலிமை அளிப்பது. அதன் பிரதி குறித்த எழுத்தில் எனக்கு விருப்பம் உள்ளது. பிரதியினுடைய இன்ப நாட்ட வெளியினில் நான் நடந்துசெல்ல அனுமதித்த விதத்தில் அது என்னைப் பிரதியின் காம இன்ப (erotic) நாட்டத் தன்னமையினை எழுதவும் வாசிக்கவும் அனுமதித்தது. குறிப்பான்களின் பிரதி எனுமளவில் இவை (காமம், இன்ப நாட்டம்) காணப்பட்டன. எனக்கு இப்போது இத்தகைய களிப்பும், மகிழ்ச்சியையும் அளிக்கும் பிரதிகளை எழுதவும் பிரதிக் கோட்பாட்டில் பிரதியுடன் பெருமகிழ்ச்சி மற்றும் கவர்ச்சியூட்டுதலை அடிப்படையாகக் கொண்டு மறு பங்களிக்கவும் மிகுந்த ஆவலும் தூண்டுதலும் கொண்டு இப்பாதையில் செல்கின்றேன். பிரதியிலுள்ள டான் ஜுவானிசம் (Don Juan) பற்றி நாம் முழுமையாகப் பேசவேண்டும். எதற்காக ஒரு பிரதி கவர்ச்சி ஊட்டுகிறது? ஒரு பிரதியின் காமத்தூண்டுதல் என்ன? இத்தகைய பிரதிகள் மகிழ்விக்கும் நிலை முற்றிலும் கலாச்சார ரீதியானதா? அது கலாச்சாரம் சார்ந்ததா? அல்லது மேலும் தொடரும் யதார்த்தமா? அப்படியானால் உயர் தொடர் நிலை இயங்கியல் உறவிலுள்ளதா? இக் கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன்.
கேள்வி: சாதே, பூரியர், லயோலாவை வாசிப்பதில் நீங்கள் பெரு மகிழ்ச்சி அடைகிறீர்கள். சாதேயைப் பெருமகிழ்ச்சி கொண்டு வாசிப்பது நமது சமூகம் ஏற்காத ஒன்று. வழக்கமான சித்தாந்த அணுகுமுறைகளில் ஒரு நுட்பமான மறுப்பு நிகழ்கிறது. (ஜென் தத்துவம் உதாரணமாக ) அல்லது சாதேயை ஒரு நோய்க் குறியாளராக நோக்குதல் அது. பூரியரிடம் என்ன களிப்பும் மகிழ்ச்சியும் உண்டோ அது லயோலாவிடம் இல்லை. அத்தகைய துவக்கமுமில்லை. நீங்கள் இவ்விரு எழுத்தாளர்களிடத்தில் இதனை எவ்வாறு உணர்கிறீர்கள்?
பதில்: மற்றவர்களைப் போலவே சாதே ஒரு சலிப்பூட்டும் எழுத்தாளர் என்பது தவறு. நான் சாதேயை வாசிக்கிறேன். சில பத்திகளை விடுத்துப் படிக்கிறேன். அவர் எனக்கு மிகவும் விருப்பத்தைத் தூண்டிய எழுத்தாளர். வேறு எந்த எழுத்தாளரும்–நம்முடைய இலக்கியங்களில் ப்ரௌஸ்ட் போன்றவர்கள் இத்தகு விருப்பத்தைத் தூண்டுபவர்கள். ஆனால் யாரும் இவ்வளவு மாறுபட்ட நிலையில் வாசிக்கவும் எல்லையற்று மறு வாசிப்பு செய்யவும் தூண்டியதில்லை. இத்தகு கண்ணோட்டத்தில் பூரியர் தொகுப்புத்தன்மை உடைய எழுத்துகள் வடிப்பவர். பூரியருடன் நமை வருடிச் செல்லும் உக்கிர வல்லமை உடைய சிற் சிறுநிலையில் உள்ள பகுதிகள் ஏராளம். அதுபோல தேவையற்ற, தாங்கமுடியாத அதிகம் நிறைத்துக் காணப்படும் பகுதிகளுமுண்டு. அவரை வாசிப்பது சலிப்பூட்டும். அதில் ஒரு உயிர் நாடியுள்ள கதைத் திட்டம் இருக்காது. நாவலின் சரடுகளுமில்லை. வழக்கமான ஒரு பாணியில் சொல்வதானால் அது வரிவடிவில் குறைந்த வாசிப்பு அனுபவத்தையும், அர்த்த அளவில் அதிக வாசிப்புக் கோரலையும், மிகுதியும் கவித்துவம் நிறைந்துள்ளமையுமாக உள்ளது. லயோலாவைப் பொருத்தமட்டில் இத்தகு மகிழ்வினைக் கோர முடியாது. குறிப்பாக கிருத்துவச் சொல்லாடல்களிலிருந்து தொலைவில் உள்ள சாதேயை வாசிப்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
புரட்சி என்ற மனோநிலையில்கூட என்னை நான் அதில் முதல் நிலையில் செலுத்திக்கொள்ள எண்ணமில்லை. லயோலாவின் சொல்லாடல் என்னை எரிச்சலூட்டுமல்லது மெய்யான உவகையையும் அளிக்காது. ஆனால் அவர் மொழியியல் கட்டமைப்பின் மயிர்க்கூச்செறியும் அனுபவத்தினை அளிக்க வல்லவர். ஒருவிதமாக உவகை கேம்போலியன் (Jean-François Champollion, European decipherer) அல்லது மற்ற மொழிப் பூஜ்யக் கணக்கிடலாளர்கள் அறிந்துள்ளபடி இதனை நாம் உணரவேண்டும். இவர்களை ரோமன் யாகப்சன் – க்ரிப்ட் (crypt-hidden element) ஆய்வாளர்கள் மறை மொழிப் பகுப்பாய்வர்கள் என்று கூறுவர்.
கேள்வி: இத்தகைய ஒரு பொருள் எத்தகைய அளவில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது?
பதில்: இத்தகைய ஒரு பொருள் எத்தகைய அளவில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது என்பதைக் குறைத்து மதிப்பிட இயலாது. இன்று அடிப்படைவாதச் சொல்லாடல் மற்றும் தீவிரவாதச் சொல்லாடல் இரண்டும் என்பதுகூட அவ்வளவு ஆர்வத்தைத் தூண்டுவதல்ல. புரிந்துகொள்ள வேண்டியதும், விளக்கம் தேவைப்படுவதும் உறுப்புகளால் முன் மொழியப் படுவதும் காம நாட்டம் அல்ல. மேலும் அதன் பிரச்சினைகள் விடுதலை மற்றும் தணிக்கை ஆகியனவாகும். அறிவுபூர்வமான நடவடிக்கை என்பது இரண்டாம் தர, பாலுறவு நத்தையாக இருக்கவேண்டும். குறிப்பாக மொழியில் உள்ள இரண்டாம் நிலைப்பாலுறவாக. மொழியில் காணப்படும் காமாந்தக அல்லது பாலுறவு வெளி என்பது மக்கள் திரள் கலாச்சாரத்தில் உள்ள காம நாட்டம் அல்ல. ஆவண்ட் கார்ட், (avant garde) எனும் மறுத்தலாளனின் செயல் காம (erotic) நடவடிக்கையின் தடையினைக் கொளுத்துதல் ஆகும். அது துரதிர்ஷ்டவசமாக, அரசியல் சித்தாந்த மொழிகளில் பரவிக் கொண்டுள்ளது. அதனால் இத்தகு சொல்லாடல்கள் ஒளியின்றி கனமாக திருப்பிச் சொல்லும் விதமாக, அலைக்கழிப்பதாக, சலிப்பூட்டுவதாக உள்ளன.
கேள்வி: நீங்கள் ”வாசித்தலின் புலம்” எனும் சற்றுப் புதிரான கருத்து பற்றிக் கூற இயலுமா? நீங்கள் எழுதினீர்கள்—பூர்ஷ்வாக் கருத்தியல் ஒருவர் தமக்குத்தாமே எத்தகைய கேள்வியும் கேட்க இயலாமல் அவர் எந்தப் புலத்தை அல்லது இக்கருத்தியலுக்கு எதிரான கேள்வியும் எழுப்ப இயலாது அதனை நுகரவும் முற்படும்போது நிகழும் குழப்பம் என்று எழுதி உள்ளீர்கள். இது சொல்லாடலற்ற வெளியா? (நாம் பேசுவதால் சொல்லாடுகிறோம். தெருக்களில் எழுதுவது சாத்தியமற்ற நிலையில் இவ்வாறு கூறுகிறீர்களா?) அல்லது இது எதிர் சொல்லாடலின் வெளியா? (நாம் வர்க்கக் கலாசாரம் பற்றிப் பேச வேண்டுமா?)
பதில்: ஒவ்வொரு தடவையும் பூர்ஷ்வா கருத்தியலுக்கு எதிரான வசைமாரி பொழியும் போதும் இவ்வினாவிற்கான ஒரு வித மாயவித்தையுடன் அக்கேள்வி உள்ளது. நான் எந்த நிலையில் இருந்து பேச வேண்டும்? ப்ளங்கோவிலிருந்து துவங்கிய அனைத்து நவீனத்துவமும் அதற்கு எதிராகவும் நான் போராட விரும்புகிறேன். துவங்கப்பட்டுள்ள சாரமுள்ள எதிர் பிரதிபலிப்புச் சொல்லாடல்கள் அவை மொழியின் எல்லையற்ற இயல்புக்குள் பாவனை செய்து கொண்டிருப்பன. அவை ஒரு குறியீடாக மட்டும் நின்று போவதில்லை. நான் வாசித்தலின் காம நாட்டத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதன் மூலம், எளிதாக நான் அடிப்படைவாதத்திற்கு எதிராகச் செல்கிறேன். இன்று அடிப்படைவாதச் சொல்லாடல் மற்றும் தீவிரவாதச் சொல்லாடல் இரண்டும் ஒன்று கலந்து வசைமாரி பொழிகின்றன. அடிப்படைவாதச் சொல்லாடல் என்பது ஒரு குறியீட்டில் உருவாக்கப்பட்டு, மொழியினை ஒரு இறுதி நிலைக் குறிப்பானுக்குள் இறுக்கிச் செலுத்துவதன் மூலம் அடிப்படைவாதச் சொல்லாடல் மற்றும் தெய்வீக அருட் சொல்லாடல் ஆகியவற்றுக் கிடையிலான உறவை உறுதிப்படுத்துகின்றன. குறிப்பீடு பொதுவாக ஒரு காரணத்தின் வடிவத்தை எடுக்கிறது. அரசியல், நன்னெறி, சமயம் போன்றன அவை. ஆனால் சொல்லாடல் (நான் தனி மனிதத் தேர்வு பற்றிப்பேசவில்லை) தானாக நின்றுபோகும் நிலை ஏற்படுமானால் அது குறிப்பீட்டுக்கு எதிராகச் செல்லும்போது அது அடிப்படைவாதத் தன்மை உடையதாக மாறும். தீவிரவாதச் சொல்லாடலுக்கு ஒரு முரட்டுத்தன்மை உண்டு. அதனை ஒருவர் ஏற்கலாம் அல்லது ஏற்காமல் போகலாம். ஆனால் அது குறிப்பானுக்குள் நிற்கிறது. அது மொழியினைப் பகடியாட்டக் குறிப்பீடுகளுக்குள் சிக்கச் செய்து சித்தரிப்புகளைப் பெரிதாக்குகிறது.
மொழி இல்லா வெளி என்று ஒன்று இல்லை. மொழியினை ஒருவர் சொற்கள் அளவற்ற சொற்கள், மற்றும் புனித கௌரவமிக்க வெளி, இவ்வெளி யதார்த்தம் மற்றும் உண்மையின் வெளி மற்றும் மொழிக்கு அப்பாற்பட்ட வெளி எனப் பலவாறாக இருக்கும். இவ்வெளியுடன் சொற்கள் சார் மொழியைக் கொண்டு முரண்பட இயலாது. அனைத்தும் மொழியே. மொழி எங்கும் உள்ளது. மொழியே அனைத்திலும் பரந்து உள்ளது- பரவலாக்குகிறது. அது இல்லாமல் யதார்த்தம் இல்லை. மொழி அற்றுப் போய் எந்த ஒரு அணுகுமுறையும் மறைவாக அல்லது நடுவாந்திரமாக மொழிக் குறைவான நிலைப்பாடுகளுடன் இருக்குமானால் அது மோசமான நம்பிக்கையின் உற்பத்தி ஆகும். மொழியில் இருந்து நிகழும் மாற்றம் என்பது பொருட்கள் மாறியிருக்கும் நிலை. பூர்ஷ்வா கலாச்சாரம் என்பது நம்முன் உள்ளது. நாம் உருவாக்கும் வாக்கியம், நாம் பேசுவது நமது உவகை மகிழ்ச்சி ஆகியவற்றில் உள்ளது. சொல்லாடல் அற்ற ஒரு நிலைக்கு நாம் செல்ல இயலாது. ஏனென்றால் அது இல்லாத ஒன்று. பயங்கர, தீவிரவாத அதி துரித அணுகுமுறைகளைக்கூட பூர்ஷ்வா கலாச்சாரம் நீக்கி இழப்பினை ஈடு கட்டும். இப்போது கலாசாரத்தின் மீது சரியான தாக்குதல் உள்ளது. இத்தகு தாக்குதல் வெற்றியைக் கொணர இயலாது. எனினும் அது மாற்ற முயற்சிக்கும் மொழியினைக் கழிவுப் பொருளாக்கும். நாம் பூர்ஷ்வா மொழியுடன் கூட, அதன் உருவகத்தின் சித்தரிப்புகள், அதன் வாக்கியத் தொடருடன் அதன் வார்த்தை மதிப்பீடுகளுடன் ஒரு புதிய மொழியினைக் கட்டமைக்கின்றோம். இவ்வெளியில் எழுதுவதன் பொருள் அதற்கு ஏற்கனவே தரப்பட்ட இடத்தில் இல்லை.
கேள்வி: வாசித்தலின் உவகை பற்றி மீண்டும் நாம் பேச உள்ளது. நீங்கள் எழுதினீர்கள், ”வாசித்தலின் பெரு மகிழ்ச்சியே அதன் உண்மையை உறுதிப் படுத்தும். ”புரட்சிகரமான நடவடிக்கையும் வாசிப்பின் இன்பத்தை நிலை குலைக்குமா?
பதில்: மார்க்சீய சூப்பர் ஈகோ வாசித்தலின் இன்பத்தைக் கட்டுப் படுத்துகிறது. மிக எளிதாக. வரலாற்றில் மார்க்சீயம், லெனினியம் தீர்வுகளை எதிர் நோக்கி உள்ளது. அவர்கள் இன்பம் குறித்துச் சிந்தித்தவர்கள் இல்லை. மார்க்சின் பிரதிகள் இறுதி இலக்காக புரட்சியினை முன் மொழிந்து கொண்டிருக்கும், ஆனால் அதுதான் அதில் உள்ள இன்பம். அப்பிரதியின் இன்பம். அதில் உள்ள உணர்வு. பிரதியின் இன்பம் பற்றி ஆராயும் போது எனக்கு ஒரு பெருமைமிகு ஆதரவாளர் உள்ளார். அவரே ப்ரெக்ட். ப்ரெக்ட்டின் மகிழின்பத்தை எவராவது இல்லை எனக் கூற இயலுமா? அவரது கருத்தியல் மற்றும் நாடகவியல் ஒரு விதத்தில் மார்க்சீய விமர்சனம் கூட. அதில் வலிவும் ஆற்றலுமுண்டு. அறிவுமுண்டு. ப்ரெக்ட் மார்க்சீயராயிருந்து இன்பம் பற்றிக் களைப்பின்றிப் போராடியவர். அவரது கொட்டகை மகிழ்ச்சியின் இருப்பிடமாக இருக்கவேண்டுமா என்றார். புரட்சியின் பொறுப்புக்கு அது எதிரானதல்ல. அவரது நாடகங்களில் உணர்வு மிகுதியான, வாஞ்சையுடைய சித்தரிப்புகள் மகிழ்ச்சி, இன்பம் ஆகியவற்றின் மதிப்புடையனவாக இருந்தன. அவருக்கு சுருட்டு எவ்வளவு பிடிக்கும்? மார்க்ஸ் ஒரு சுருட்டுப் புகைப்பாளர். புரட்சிகரப் பாணியில் ஒரு இன்ப நாட்டம் உடைய பரிமாணம் உள்ளதைப் பாருங்கள்.
இந்த மாணவர்களை நினைத்தால் கவலையாக உள்ளது. அவர்கள் மொழியில் மகிழ்ச்சியின் பரிமாணம் துல்லியமாக இல்லை. அவர்கள் மற்றபடி உண்மை, சமூகம் பற்றிய பார்வை உள்ளவர்கள்.
மகிழ்ச்சி உடையவர்கள். இன்ப நாட்டமுடையவர்கள். அவற்றின் மிச்சங்களை நன்கு கழுவிச் சுத்தமாகிட முனையும் குரல்களை நாம் நிறுத்த வேண்டும். இது எனது இலக்கு. மகிழ்ச்சி இன்பம் என்பது மிச்சமாக உள்ள நிலை என்ற எண்ணம் கருவறுக்கப்பட வேண்டும். புரட்சிகரச் செயல் பாட்டில் எந்நிலை, எத்தன்மையதாயினும் அதற்கு ஒரு பல் ஒலிச் செயல் தேவை. அது பல்வாறாக உள்ள நடத்தைகள், சொல்லாடல், குறியீடுகள், செயல்பாடுகள், உறுதிப்பாடுகள் ஆகியவற்றின் சமரசம் நிறைந்த பல் செயல்பாடாக வேண்டும். நாம் இதுவரை முரண்பாடு எனப் பேசியவை வர்க்க முரண்பாடு மட்டுமல்ல, இன முரண்களும் கூட. அறிவு ஜீவியின் பொறுப்பு இதில் என்ன? அவன் ஒன்றும் பாட்டாளியின் போலி மாதிரியல்ல. அவன் பாட்டாளியின் மொழியில் பேச வேண்டியதில்லை. அவன் தனக்கான மொழியில் பேசவேண்டும். அவன் புரட்சி எனக் கருதுவது தான் எந்த அறிவுத்தேடலை நிகழ்த்தத் தடைஉள்ளதோ அதனை நீக்குவது பற்றி. ஒரு அறிவாளியாக இந்தச் சமூகம் வித்திட்ட அந்தியமாதல் பற்றிப் பேச வேண்டும். தனது அந்தியமாதலை அவன் உணர்ந்தால் அதன் அளவு விடுதலையைக் கோர வேண்டும். மற்றவர்களுடைய விடுதலையை அல்ல.
கேள்வி: இன்னொரு சந்தேகம். அறிவியல், அறிவியல் சார்ந்த எழுத்துகளை நீங்கள் சந்தேகிக்கிறீர்கள் எனச் சிலர்கருதுகின்றனர்.?
பதில்: உண்மை. என் பற்றிய சில கற்றவர் சித்திரங்கள் இவ்வாறு உள்ளன. நான் முதல் குறியீட்டு வாதிகளில் ஒருவன் அதுவே எனக்கு அறிவியல் தன்மையைக் கொடுத்துள்ளது. போலவே நான் அறிவியல் அணுகு முறையற்றவன், உணர்வு சார்ந்து இயங்குபவன், பகுத்தறிவுப் போதாமையுள்ளவன் என்றும் கூறுவர். சரி நேராக வருவோம். எனக்கு அறிவியல் சொல்லாடலில் விருப்பம் இல்லை. அறிவியலை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. போலவே அறிவியல் எழுத்தையும். நான் எனது க்ரிட்டிக் அட் வெரிட்டேயில் (critic at verite) கூறியபடி அறிவியலுக்கு எதிராக எதையும் சொல்லவில்லை.
இலக்கியத்தின் அறிவியல் — அப்படி ஒன்று இருக்குமானால் எனது ஐயத்தின் பாற்பட்டு அது உள்ளது. அதுதான் செய்தி. சில ஆய்வாளர்கள் ஐயமற்று இலக்கியத்தை ஆய்வு செய்வர். தொதரோவை (Todorov) எடுத்துக் கொள்ளுங்கள் — நான் அவரை முழுமையாக அங்கீகரிக்கின்றேன். இலக்கிய அறிவியல் பற்றி அனைத்து ஆய்வுகளிலும் தீராத ஒன்று உள்ளது. அறிவியல் சொல்லாடல். இலக்கிய அறிவியல் எத்தகு சொல்லாடல் மூலம் தன்னை நிறுத்திக்கொள்ளும்.? அனைத்து மோசமான நம்பிக்கைகளில் இருந்தும் நாம் வெளியேறி விட்டதாக ஒரு கதை உண்டு. அதுவே அரித்மெடிக். எண்கணிதச் சொல்லாடல். இதனை நாம் உணர்ந்து கொள்வது, இலக்கியப் பிரதியினை அதனுடைய தர்க்கச் சமண்பாடுகளுக்கிடையில், சற்று வலுவான ஆனால் மிகுதியற்ற, அளவான தூண்டலுடன் சமர்ப்பிக்கும் போது வடிவங்களில் அது புகலிடம் கொள்ளும். அவ்வாறு புகலிடம் கொள்ள நாம் அதனை அவ்வாறு சமர்ப்பிக்கிறோம்–ஐயத்தோடு. அவ்விடத்தில் அறிவியலின் தொடர்பற்றுப் போகும் நிலை தீர்வடைகிறது. கணிதச் சொல்லாடல் உடனடியாகவும், முழுமையாகவும் குறிப்பீடு நிலை இன்றிக் களங்கமற்ற தொடர்பாகத் தன்னை வெளியிட்டுக் கொள்கிறது. தேசிய மரபு மொழியைக் கேட்கும் மாத்திரத்தில், உங்களுக்கு கலாச்சார மற்றும் தவிர்க்க வியலாத பல்குறிப்புப் பொருட்கள் உள ஆய்வு வகைப்பாட்டினில் சித்தரிப்புகள் வழங்குவதோடு பல்வேறு அர்த்தங்கள் படிமங்களின் வரிசை ஆட்டமாகவும் அது இருக்கும். ஆனால் அறிவியல் சொல்லாடலில் அறிவியலின் பல்வகை நன்மைகள் பற்றிய சித்தரிப்புகள் கிட்டாத இலக்கிய அறிவியல் சொல்லாடல் என்ற ஒன்று இருக்குமானால் அது விதிமுறைக்கு உட்பட்டதாக, அறிவியலாக இருக்கும். அவ்வகையாகவே எல்லா மொழிகளின் கருத்தியல் தன்மை கடந்து நிலைக்க முடியும். அது ஒரு கற்பனைக்கெட்டாத அறிவியல் கற்பனையாடல். மொழி அல்லது மொழித் தொகுப்பு குறிப்பிட்ட பொருளின் வெளியீடாக தவறாக உணரப்பட்ட சூழலில் அதனை மிகுதிப் பொருள் அனுமதிக்காத நிலை என்று கொள்ளவேண்டும். சமூகவியல் தொடர்களை நாம் துண்டாக்கிப் பார்க்க இயலும். எழுதுதல் என்பது நமது படிமத் தொடரிகளை நாம் கட்டுடைத்து மீறிச் செல்லும் பயிற்சியினை அளிக்கிறது. (எக்ரிச்சர் (Ecriture) எனும் எழுதுதல் எக்ரிலான்ஸ் (Ecrilance) எனும் எழுதக் கூடியதற்கு எதிரானது. இத்தகைய சொல்லாடல்களை விழிப்புணர்வோடு கூடி சுயமழித்து எழுதுதல் என்பது). நாம் எழுதுதல் வாயிலாக நம்மை நாமே உளப்பகுப்பாய்வுக்கு ஆளாக்குகிறோம். நம்மை ஆட்படுத்துவதன் வாயிலாக, ஒரு புள்ளியில் புறம் அகம் இரண்டும் மதிப்பற்றதாக நீக்கப் படுகிறது. பழம் கருத்தாகிய அகம் சார் விமர்சனம் என்ற கருத்து அர்த்தமற்றது.
கேள்வி: நீங்கள் ‘செண்டெர் டி நெஷனல் டி ரிசர்ச் சயிண்டிஃபிக்கில் (Centre de national de research scientific) இலக்கியப் பிரதிகள் பற்றி ஆய்வு செய்தீர்கள். நீங்கள் அங்கு ஆய்வறிஞர் என்பதனை அவர்கள் உங்களுக்கு அளிக்கக் காரணமென்ன? அங்குதான் மோசமான நம்பிக்கை துவங்குகிறது. நீங்கள் அதனைக் கற்றுக் கொண்டால், அறிவியல் என்னும் நடவடிக்கை அங்கு மேற்கொள்ள ஒப்புக் கொண்டீர்கள் எனப் பொருள். இது ஒரு அறிவியல் சொல்லாடல் என்பதால் அதனை எக்ரிவன்ஸ் எனலாம். அப்போது பிரதி தொலைந்து போகும். நீங்கள் அங்கு பிரதியுடன் சுய ஆய்வில் ஈடுபடும், மாறுதலளிக்கும் உறவில் இருந்தும் வெளியேறுவீர்கள். நீங்கள் பிரதியை வாசிக்க இயலாது. நீங்கள் ஒரு குறியியல் அல்லது வரலாற்று ஆவணமாக அதனை ஆக்கி விடுவீர்கள். நீங்கள் கதையாடல் மாதிரிகள், கதையாடல் வாக்கியக் கட்டமைப்புகள் அல்லது ஜேகோப்சனிய (JACOBSANIAN) வகைமைக் கவிதைகள் உருவாக்க ஆரம்பித்து விடுவீர்கள். நீங்கள் வாசித்தலுக்கு எதிராகப் போய் விடுவீர்கள். இனிமேல் நீங்கள் வாசிப்புப் பொருள் அதனுடனான தொடர்பினால் நீங்கிப் போவதை மேற்கொள்ளும் பயிற்சியில் இருந்து பிறள்வீர்கள். நீங்கள் ஒரு தண்டனையாளனாக எழுத்தாளன் எதை எழுதினானோ அதனையே பொருளாக உணர்ந்து ஒரு அடக்கமான வாசிப்பாளனாக மாறிப்போக உள்ளீர்கள். இதில் ஒரு அகவய அகத்தன்மை மட்டும் காணப்படும். எழுதியவனின் அகம், ஒரே வழி அதனை மீண்டும் எழுதுவதுதான். இப்போது விவாதம் தொடர்பான கேள்வி, நான் ஒரு எழுத்தாளனாக இருந்தால் என் இறப்பின் பின் எவ்வாறு உணரப்பட வேண்டும்?
பதில்: நான் கல்வி என்னும் உள்ளடக்கம் மனிதாபிமான தொனியில் மற்றும் செவ்வியல் நோக்கில் கண்டு உணர்ந்தவன். மீமெய்யியல் (Metaphysics) ஒன்றைத் துவக்கமாகக் கொண்டு பின் மார்க்ஸ், நீட்ஸ்சே, ஃப்ராய்ட் ஆகியோர் நீண்டு பங்களித்த மரபில் ஒருவன். அது இப்போது எவ்வளவு கிளை விட்டுள்ளது? நான் இத்துடன் முடிந்துவிடப் போவதில்லை… இங்கு நான் ஒரு ஊடகம். அவ்வளவே. என்னில் இருந்தும் இது கடந்து போகும். அது இன்னும் பல்கிப் பெருகி விவாதத்துக்கு உள்ளாவதில் ஆர்வம் உள்ளவன். கோட்பாடுகளின் மாற்றம் பற்றி எழுதுதல், அழிந்து போதல் இடையில் ஒன்றுடன் சமரசப் படுத்துதல் என்ற நிலைகளில் பதிவாகுதல் ஆகிய தருணங்கள் உவப்பானவை. இந்த நீண்டு செல்லும் தருணம் வெடித்துச் சிதறுதல்… இப்போதைய பிரதிகள் நவீன பிரதிகள் இருமைத்தன்மையுடையன. இது விமர்சனபூர்வமானது மகிழ்வூட்டுதலல்ல.
கேள்வி: பிரதியின் இன்பம் படைப்பாளனின் ஒத்திசைவோடு திரும்ப வருதல் — என்ற உங்கள் கருத்து பற்றி?
பதில்: ஒரு வரி – இப்படி நான் கருத்துக் கூறியது ஆவன் கார்ட் தன்மை கொண்டது. இது ஒரு அற்புத நிலை – படைப்பாளி விடுதலை கொண்டு இறந்த காலத்தை அடைதல் அதன் வழி ஏற்கும் நிலையில் தங்குதல். கவர்ச்சியான உடல், அது பற்றிய நினைவு இன்னும் தூண்டல் விளைவிப்பதாக இருத்தல்… நமக்கு முன்னோடிகள் இதில் உள்ளனர். ப்ரூஸ்ட், ழான் ஜெனே, அவர் நாவல்கள் மூலம்-அவர் சொல்வது போல நான். ழான். நமக்கு அல்லது யாருக்கும் இவ்வாறு தோன்றாது. அவரது நூல்கள் தனிப்பட்ட உள்வயக் கூறாக ஒலிப்பன. ஜெனே அவரே தன் நூல்களின் தாள்களிலான கச்சிதமான பாத்திரம். அதுவே அவரது வெற்றி. அவரை நாம் அங்கு குறிப்பாக உணர்வதில்லை… அவரே அங்கு உள்ளார்.