மன்னன் ராஜராஜசோழனின் பிறந்தநாள் விழாவான சதயத்திருவிழா ஒவ்வோராண்டும் தஞ்சையில் கொண்டாடப்படுவது வழக்கம்.கோயிலின் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகமும்,ராஜராஜனின் புகழைப் பரப்பும் பட்டிமன்றமும் வழக்கமானது.வழக்கமற்ற மரபுகள் சமீபத்தில் முளைத்திருக்கின்றன.சாதிக்கட்சிகளின் தலைவர்களும்,தொண்டர்களும் சதயத்திருவிழாவுக்காகத் திரளுகிறார்கள்.ராஜராஜசோழனோடு தங்கள்தங்கள் சாதிகளின் பெயர்களை இணைத்துக்கொண்டு அம்மன்னனை உரிமை கொண்டாடுகிறார்கள்.ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.ஊர்வலம் செல்கிறார்கள்.வரலாறு புதுப்புதுப் பரிமாணங்களை எடுக்கிறது. சாதிகள் ராஜராஜனைக் கொண்டாடுவதன் மர்மம் என்ன?அவர்கள் அவ்வாறு […]
0
5 Views