இன்றைய அரசியல் சூழலில், பெரியாரியம், மார்க்சியம், அம்பேத்கரியம் ஆகிய மூன்று சித்தாந்தங்களும் இணைந்து செயல்படவேண்டிய நிலை உருவாகியுள்ளதாகப் பலரும் கருத்துத் தெரிவித்து வருவதை நாம் பார்க்க முடிகிறது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பாகவே, கீழத்தஞ்சையில் இந்த மூன்றையும் இணைத்து களத்தில் செயல்பட்ட மாமனிதராக ஏ.ஜி.கே. என்று அழைக்கப்பட்ட அந்தணப்பேட்டை கோபாலசாமி கஸ்தூரி ரங்கன் வரலாறு படைத்திருக்கிறார் […]