டெரெக் வால்காட் — சொற்களும் தானியமாகும் சேறும் நிறைந்தது கவிதை
நேற்று வரை ஆங்கிலத்தில் எழுதி வந்த மிக முக்கியமான மேற்கிந்திய கவிஞரும் நாடக ஆசிரியருமாகத் திகழ்ந்தவர் வால்காட் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை டிரினிடாட்டில் வாழ்ந்தார். 1992 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. ஐரோப்பிய மற்றும் மேற்கு இந்திய கலாச்சாரத்தின் பாரம்பரியம், அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரம் ஆகியவற்றில் உள்ள இடைவெளி மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையில் ஒரு நாடோடி என்ற வகையினில் அவரது கவிதைகள் செயல் படுவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். இவரது கவிதைகள் ஆங்கில கவிதை மரபு சார் குறியீடுகள் மற்றும் கரீபியன் மொழிச் சொல்லாடல்களால் நிறைந்தவை.
“கவிதை, இது முழுமையின் வியர்வை, ஆனால் ஒரு சிலையின் புருவத்தில் மழைத்துளிகளைப் போல அது புதியதாகத் தோன்ற வேண்டும், இது இயற்கையையும் மர்மத்தையும மற்றும் இரண்டு காலங்களையும் ஒரே நேரத்தில் இணைக்கிறது.புதையுண்ட மொழி கவிதையில் அகழ்வாய்வுக்கு உட்படுகிறது.
மேற்கிந்தியத் தீவுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கரீபியன் தீவான செயின்ட் லூசியாவின் காஸ்ட்ரீஸில் டெரெக் வல்காட் பிறந்தார். அவரது தந்தை, ஒரு பொஹிமியத் தன்மை கொண்ட பல்கலைஞர் எனினும் நிறைவற்றவர். அவர் மிகவும் இளம் வயதில் இறந்தார். ஆசிரியரான அவரது தாயார் அவரைக் கவிதைவாசிப்பில் ஊக்குவித்தார். வால்காட், காஸ்ட்ரீஸ் செயின்ட் மேரி கல்லூரியில் கல்வி பயின்றார். ஜமைக்காவின் கிங்ஸ்டனில் உள்ள மேற்கிந்திய தீவுகள் பல்கலைக்கழக கல்லூரியில் உதவித்தொகை பெற்று உயர் கல்வி கற்றார்.அவரது முதல் நாடகம், ஹென்றி கிறிஸ்டோபர், 1950 இல் நிகழ்த்தப்பட்டது.
1953 முதல் 1957 வரை பல கரீபியன் தீவுகளில் உள்ள பள்ளிகளில் ஆசிரியராக வால்காட் பணியாற்றினார். பின்னர் அவர் ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பிற்பாடு அவர் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் கவிதைப் பேராசிரியராக பணியாற்றியுள்ளார், மேலும் தனது நேரத்தை டிரினிடாட் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே நெடு நாட்கள் கழித்தவாறு வாழ்ந்தார்.
கருப்பின மக்களின் வரலாறு எத்தகையது?உலகின் பெரும்பான்மை வெள்ளை இனத்தின் அடிமைகளாக, குறிப்பாக ஐரோப்பியரது அடிமைகளாக மட்டுமல்ல தென் அமெரிக்கப் பழுப்பினத்தின் அடிமைளாகவும் அவர்கள் இருந்து வந்தனர்.கருப்பின வாழ்வு வாழ்வற்றது,பண்பாடுகள் இன ஒடுக்கத்தில் அழிந்து போன பின் அடையாளமற்ற உடல்களாக மிஞ்சிப் போன அவர்களது இருத்தல் பொருளற்றது எனினும் கற்பனைகளற்றது அன்று எனும் போது கவிதைகள் அவர்க்குச் சொந்தமாகின்றன.அம்மக்களே காவியங்களால் பெருமிதப் பட்டனர் எனும் சொல் மிகை ஆக்கம் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள இயலும்.
பத்து வருட போர் முடிந்தது.
ஹெலனின் தலைமுடி, சாம்பல் நிற மேகம்.
டிராய், ஒரு வெள்ளை சாம்பற் குழி
தூற்றல் கொண்ட கடல் அருகில் .
தூறல் ஒரு வீணையின் சரங்களைப் போல இறுகுகிறது.
மூடு மேகக் கண்கள் கொண்ட ஒரு மனிதன் மழையைத் தேர்ந்து
ஒடிஸியின் முதல் வரியைப் பறிக்கிறான்.
ஹெலெனை மீட்க எழுந்த போரில் ட்றாயிடம்(TROY) க்ரேக்கம் மண்டி இடுகின்றது எனினும் கற்பனைக் கெட்டாத ஒரு சதி அந்த நாட்டினை வீழ்த்துகிறது.ஹெலென் தன்னைக் காமுகித்த உணர்வுகள் ,ஆராதித்த மண்ணை விட்டுச் செல்லும்பொழுது அவள் உயிரற்றுப் போகிறாள்.அங்கு கருப்பினத்திற்கு வரலாறு இல்லை என்பதைக் காவியப் புனைவாளர்கள் எழுதுவர்.ஆனால் மானுட உடல் கருப்பின அடையாளம் மீறி இல்லை. ஹெலெனின் தலைமுடி இயற்கை அளித்த கருப்பு.எந்த வண்ணம் எதற்குத் தேவை என்று இயற்கையைத் தவிர அறிந்தவர் யார்?புதை குழி வெண்மை.நிலமற்றவற்றிற்கு வான்,காற்று ஆகியன உள்ளன.அடிமைகள் என இகழ்ச்சி கொண்டோர் வழிபட பண்பாடு கொண்டாட எமக்கு இயற்கை , பரந்த வெளி ,காற்று, நீர் என அனைத்தும் உண்டு.எமது பண்பாடு எமது உயிர்ப்பு.தானியங்களில் பெயர் எழுதப் பட்டுள்ளது என்பது விவிலிய நம்பிக்கை.எமது தானியங்களில் எமது பண்பாடு உள்ளது.எமது உணவான இறைச்சி படைப்புக்கும் உகந்தது.கேய்னும் ஏபெலும் இறைச்சி ரத்தம் கொண்டே இறைவழிபாடு செய்தனர்.பதனிடாத் தோலைப் பதனிட்டு நாங்கள் உலரச் செய்யும் வெளிகளில் ஈக்கள் மாமிச மயக்கத்தில் அலையும்.உலரச் செய்த பருந்திறைச்சி பறவைகளுக்கான படைப்பு.மாமிசக் கழுகுகள் எமது மதிப்பிற்கு உரியன,கரும்பு விளையும் காணிகளில் இந்தியர்கள் அடிமைத் தொழில் புரிய வந்தோர்.அவர் எம்மிலும் இரக்கத்திற்கு உறியோர். ராம் லீலா மைதானத்தில் ராவண வதம் செய்து தமது வழிப்பாட்டை நிறைவேற்றுவர்.பலிகளில் உள்ளது மக்களின் வேண்டுதல்களின் நிறைவு.
டெரெக் வால்காட்டின் உலகு இவ்வாறு கட்டுக் கடங்காதது.எல்லையற்றது.
தொன்மக் கொண்டாட்டம் நிறைந்த அவர் கவிதைகள் மாமிசமும் சேறும் கலந்தவை.நவ கவிஞர்கள் போல் இற்றைப் படிமங்கள் அவர் கவிதைகளில் ஆகப் பொருத்தம் உடையன அல்ல. ஆஃப்ரிக்கப் பழங்குடி இனம் இன்றும் பழங்குடியாக இல்லை.அவர்கள் காலத்தால் மாற்றம் பெற்றவர்கள்.கல்வி, அறிவு இவற்றால் மாற்றம் காணும் ஒரு ஆஃப்ரிக்கா தனது தொன்மத்தை என்றும் இழக்க விரும்பாது.போதக சார மிகுந்த கடந்த கால மீட்பு மதவாத கலாசார நவ முறைமகளைக் காட்டிலும் அவர்கள் கல்வி , அறிவியலை விரும்புவர்.எனினும் தொன்மம் அவர்கள் இழக்க இயலாத அடையாளம்.
1.ப்ளீக்கெர் தெரு ,வேனில்
உரைநடைக்கு எலுமிச்சைகளுக்கு, நிர்வாணத்திற்கும் தளர்வுக்கும்
கற்பனார்த்த ஓய்வில் நெடுங்கிடையாய்க் கிடக்க
தொலைப் புல்லாங்குழல் ஒலி வெற்றுக் கால்கள் மற்றும்
சிக்கலான விரிப்புகள் நிறைந்த ஆகஸ்ட் மாதப் படுக்கை
அறை மற்றும் ஞாயிற்று உப்பு –ஆ… வயலினும்
வேனிலின் படு நிழல் கீற்றுகள் ஒன்றாய் இறுக்க
தெரு முழுக்க அக்கார்டியன் இசை நிறைந்து பாவ
தூசு எங்கும் பரவ சிறு நிழல்கள் என்னிலிருந்து விடுபடும்.
இசை இங்கு துவங்கும் முடியும் ,இத்தாலியா மியா ,ப்ளீக்கெரின்
அடிமை ,அன்டோனியோ மற்றும் பிள்ளைகளின்
நீர்க் கதறல்கள் ஆகியன
புரளும் வெண் தாளில் காணும் ரோஸ் நிற வானைக் கிழிக்கும்
நாசித் துவாரங்களில் சாயும் நிழல் நீரின் நறுமணம் உள்ளூறும்
குப்பை கூளம் நிறைந்த கீழத்தெருவில் மனதில் சூழும் தீவுகள்
மற்றும் எலுமிச்சையில் நீர் என்பது அரிதானது
அங்கு ஹட்ஸனை போல கடல் முழுதும் தீப் பிழம்புகள் நடனமாடும்
நான் உன்னை வேனிலின் சூட்டில் உடை களைவேண்
இங்கு வருவா யெனில் நகைத்து உன் வெற்று
தசையினை வறண்டு போகச் செய்வேன்.
2. புதிய உலகின் வரைபடம்
நான் தீவுக்கூட்டம்
இந்த வாக்கியத்தின் முடிவில், மழை தொடங்கும்.
மழையின் விளிம்பில், ஒரு பயணம்.
மெதுவாக படகில் முன் செல்ல தீவுகள் மறையும்
மூடுபனிக்குள் ஒரு முழு இனத்தின்.துறைமுகங்கள்
மீதான நம்பிக்கையுள் நுழையும்
பத்து வருட போர் முடிந்தது.
ஹெலனின் தலைமுடி, சாம்பல் நிற மேகம்.
டிராய், ஒரு வெள்ளை சாம்பற் குழி
தூற்றல் கொண்ட கடல் அருகில் .
தூறல் ஒரு வீணையின் சரங்களைப் போல இறுகுகிறது.
மூடு மேகக் கண்கள் கொண்ட ஒரு மனிதன் மழையைத் தேர்ந்து
ஒடிஸியின் முதல் வரியைப் பறிக்கிறான்..
முஷ்டி
3. முஷ்டி
என் இதயத்தை சுற்றி வளைத்த முஷ்டி
கொஞ்சம் தளர்த்த, நான் ஒளிர்வினை
மூச்சறைகின்றேன் ஆனால் அது பின்னும் இறுக்க
மீண்டும். நான் எப்போது அன்பின் வலியினை
நேசிக்காது இருந்தேன் ஆனால் இது நகர்ந்தது
முதற் காதலில் இருந்து உளச் சிதைவுக்கு
மனச் சிதை கொண்டவனின் வலிய இறுக்கம்
இதில் உள்ளது.பகுத்தறிவற்றதன் உலோக விளிம்பினை
அது நெருக்கும்.ஊளையிட்டுப்
படு குழியில் தூக்கி எறியுமுன்
இதயமே இறுகப் பற்று அவ்வழியிலாவது நீ வாழக் கூடும்.
4.நெருப்பால் ஆன ஒரு நகரத்தின் மரணம்
தேவாலய வானைத் தவிர மற்றெல்லாவற்றையும் சூடான நற்செய்தி அழித்துவிட்ட பின்
கொழுப்பு நிண உருளையில் ஒரு நகரின் தீயால் அழிந்த கதையினை எழுதுவேன்.
ஒரு மெழுகுவர்த்தியின் கண்ணின் கீழ், அது கண்ணீரில் புகைபிடித்தது, நான்
கம்பி போல நொறுக்கப்பட்ட நம்பிக்கைகளை மெழுகினும் மேலாகச் சொல்ல விரும்பினேன்.
நாள் முழுவதும் நான் இடிந்த கதைகளுக்கு மத்தியில் அயல் நாடுகளில் அலைந்து திரிந்தேன்,
ஒரு பொய்யரைப் போல தெருவில் நின்ற ஒவ்வொரு சுவரும் அதிர்ச்சி கூட்டியது;
பறவைகள் உலுக்கிய வானம் இரைச்சல் கூடி இருந்தது,மற்றும் மேகங்கள் அனைத்தும் உருட் தொகுப்புகள்
கொள்ளை நடந்ததால் திறந்து கிடந்தன ,கிறிஸ்து நடந்து சென்ற வெளியில் கடல் புகை மண்டிக் கிடக்கும் இடத்தில் நெருப்பு உயர்ந்து தகித்த போதிலும், அவை
வெண்மை கொண்டு திகழ்ந்தன.
இது ஏன் என வினவினேன்?
ஒரு மனிதன் மெழுகினைக் கண்ணீராக வடிக்க வேண்டுமா?
அவனது மரத்துப் போன உலகம் தோல்வியடையும் போது.
நகரத்தில், இலைகள் காகிதமாக இருந்தன, ஆனால் மலைகள் நம்பிக்கைகளின் மந்தைகளாக இருந்தன;
நாள் முழுவதும் நடந்த ஒரு சிறுவனுக்கு, ஒவ்வொரு இலையும் ஒரு பசுமையின் மூச்சு
நகத்தினைப் போன்று மரித்து விட்ட ஒரு காதலை உயிருடன் மீட்டலென்பது
தீயினைக் கொண்டு மரணத்தை ஆசீர்வதிப்பது ஞானஸ்நானத்தை அளிப்பது.
5. ஆஃப்ரிக்காவில் இருந்து ஒரு தொலை தூரக் குரல்
ஆப்ரிக்க கிகுயூ ஈக்கள் போல விரைவாக
ஒரு காற்று பழுப்பு மஞ்சள் நிற பதனிடாத
தோலில் மடிப்பு விளைத்து நகரும்
மரங்களுள்ள புல் வெளியில் தளம் பாவும்
பலகை மேல் இரத்தச் சேரு கூடிய
பிணங்கல் ஓரு சொர்க்கம் எங்கும்
சிதறிக் கிடக்க…
வெம்மையான அழுகும் பிணத் துணைத்
தளபதி மட்டும் கதற…
இறந்த ஒவ்வொருவரின் மீது மேலும்
கருணை காட்டிக் கால விரையம்
ஆக்காதே.
புள்ளி விபரங்கள் நியாயம் தேட
அறிவாளி
கைப்பற்ற சிறப்புறும் காலனியக்
கொள்கை. தோட்டப் பாத்தியில் கிடக்கும்
பருந்திறைச்சி ஒரு வெள்ளைக்
குழந்தைக்கு உணர்த்துவது என்ன?
அடிமைகளுக்கு யுதரைப் போல் வீண்
ஆன பொருட்கள்
கதிரடிகளின் விளைவால் நாணர் புல்
நீண்டு சிதைவுறும்.
நீர் நாரைகளின் அழுகையால் கூடும்
வெண் துகளால் நாகரிகத்தின் உதயம்
உருள மீள்கிறது. உலர்ந்த ஆறு அல்லது
விலங்கு கருவுறும் சமவெளி துவங்கி
விலங்கு விலங்கினை விழுங்கும் செயல்
இயற்கை விதி என…எனில் மாண்புடை
மாந்தர் காயங்கள் ஏற்றுத் தம்மைப்
புனிதம் ஆக்குவார். இதனால்
கவலையுறும் விலங்குகள்
அவன் போர்கள்
இறுக்கிய விலங்கு சடலங்களால் ஆன
பறை ஒலி கொண்டு ஆடும்.
அவன் துணிவைக் கோரினால்
மாண்டோரால் வெள்ளையர் கொண்ட
ஒப்பந்தங்களின் பழங்குடிப் பயம்
மேலிடும்.
தீச் செயல் எனும் நாப்கின் மீது மிருகத்
தேவைகள் தமது கைகளைத் துடைக்கும்
மீண்டும் நமது அனுதாபம் ஸ்பெயின்
உடன் கொண்டது போல வீணாகும்.
இரண்டினாலும் இரத்தம் விடமேறியவன்
நான். எங்கே நான் செல்ல? நரம்பு பிளக்க
ஆங்கில ஆட்சியில் குடிவெறியனான
அதிகாரியை சாபமிட்ட நான் ஆப்ரிக்கா
அல்லது நான் விரும்பும் ஆங்கிலம் எதை
தேர்வேன்? நிராகரிப்பேனா?
பழி தீர்ப்பேனா? படுகொலையின் பின்
அமைதி கொள்வது எவ்வாறு?
ஆஃப்ரிக்காவை நீங்கி நான் எவ்வாறு
வாழ?
6. கடற் திராட்சைகள்
ஒளியில் சரியும் அப்பாய்மரம்
தீவுகளால் களைப்புற்றுள்ளது
இரு பாய்மரப் படகொன்று கரிபியனை நோக்கி
வீடடைய ஏஜியன் வழி இல்லம் நோக்கி
ஓடிசியுஸ் செல்லலாம்
திராட்சைக் கொத்துகளின் கீழ்
தந்தையும் மகனும் கொண்ட பேராவல்
கல் பறவையின் ஒவ்வொரு ஓலத்திலும்
நசிக்கவின் பெயரை உணரும் காமுகன் போல்
தனது மிதியடிகளூன்றி விந்தி நடந்து வீடு திரும்ப நினைக்கும்
ஒரு கடல் சஞ்சாரி அல்லது கரை இருப்போன்
என எவர்க்கும் அமைதியைக் கொணராது
இச்சைக்கும் பொறுப்பிற்கும் இடையிலான தொன்மப் போர்
ட்ராய் அதன் இறுதித் தீக் கனலை கண்டதிலிருந்து
என்றும் அழியாது நிலைத்திருக்கும்
வலிந்திழுத்த ராட்சத மூடப்பாறைகள்
கடலலை இரண்டிடைப் பள்ளத்தினை உருவாக்கும்
அகண்ட பேரலைகளில் அறு அடிச் செய்யுள் உயரும்
மோதுண்ட நுரைகள் மறைந்து வரிகள் இறுதியாகும்
…
செவ்விலக்கியம் நமைத் தேற்றலாம் ஆனால் பயனில்லை
Nausicaa is the burner of ships -the daughter of King Alcinous.
GAL PARAVAI -gull bird is a huge sea bird
ஆர் பாலகிருஷ்ணன் : ஆங்கிலப் பேராசிரியர் மற்றும் எழுத்தாளர்.
E MAIL: rdada2001@gmail.com rdada2001@gmail.com; mobile 9362949350