இரவுப் பணியொன்றின்நள்யாமத்தில்சன்னலைத் திறந்துவெளியே பார்க்கிறேன்.நோய்க்கரம் தீண்டிய பூமியின் மேலேகரிய மேகத்தின் அடர்த்திஎன்னை அழுத்துகிறது.சாரல் மழையும் சூடான தேநீரும்நினைத்த மாத்திரத்தில்வாய்ப்பதில்லையே.விடியலின் பாடலொன்றைஇசைத்தபடிஉலவும் நிலவைக்கண்டுகொண்டதாய்மின்னும் தூரத்து நட்சத்திரங்களில்ஒன்றுநீள்கோடு வெட்டி வீழ்கிறது.காற்றின் மெளனம் ஒரு புரியாதமொழி.அவசர ஊர்தியின் அலறலோடுமனிதர்களின் கூப்பாடுகள்மருத்துவமனையின் சுவற்றிற்குவெளியேயும் இரைகிறது.அகதிகளின் குடில்களைப்போல்வளாகத்தின் சுவரெங்கும் தொங்கும்குரோட்டன் செடிகளைதுயர்க்காலத்தின் சிறு சலனமின்றிநேர்த்தியாய் வெட்டியவனின்/ளின்மரணம் அழகியதாகட்டும்.நம்பிக்கையின் கண்ணி அறுபடாதுபல தசாப்தங்கள் தாண்டியும்அகதியாகவே […]